பால்ய சினேகிதனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வீட்டிற்க்கு வருவதற்கு வழி கேட்பதற்காக அந்த அழைப்பு. இப்பொழுது எங்கே இருக்கிறான் என்று வினவினேன். அதற்கு அவனோ ராஜலக்‌ஷ்மி மில்ஸ் அருகில் இருக்கிறேன் என்றான். ஒரு நிமிடம் யோசித்தேன், இப்படி விலாசம் சொல்லும் மக்கள் இப்பொழுது கோவையில் மிகவும் குறைவு. எனக்கோ முகத்தில் ஒரு சிறு புன்னகை.