மலைவேம்பு (Melia Dubia) மரங்கள் பயிரிடுவது சமீப காலங்களில் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. இம்மரங்கள் அதிக வருவாய் தருவதாகவும், முதலீடு குறைவு என்றும், பராமரிப்பு தேவையில்லை என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இதன் பின்னணி என்ன, இது எல்லாம் உண்மையா என்பதை என்னுடைய அனுபவத்தை வைத்து இங்கே தொகுத்துள்ளேன்.

 

சரியாக 3 வருடத்திற்கு முன்பு நான் இந்திய மீனவர் பிரச்சனையின் மூல காரணத்தை எழுதியிருந்தேன். முடிவில்லா அப்பிரச்சனை இன்றைய தேதியில் மிகவும் அதிகரித்துள்ளது. அதை மேலும்அண்டை நாட்டு ராணுவம் நம் மக்களை தாக்குவது ஒரு தொடர் செயலாக இருக்கும்பொழுது, ஏன் நம் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது? சாவது மீனவன் தானே என்ற நினைப்போ? இல்லை, இவர்களுக்காக நாம் ஏன் அண்டை நாட்டுடன் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற எண்ணமா? ஏன் இந்த பிரச்சனையை மட்டும் மத்திய அரசு கண்டுகொள்ளவே மறுக்கிறது. ஏன் தமிழக அரசு இதற்காக போராடவில்லை? ஏன் இதெல்லாம் செய்தியுடனே முடிந்து விடுகிறது? இப்படி பல கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. எதற்கும் பதில் இல்லை. யூகித்து எழுதும் விஷயமும் இல்லை இது.

மதிய நேரம்… வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அலைபேசி அழைத்தது.“சார், நான் B7 காவல் நிலையத்தின் காவல் அதிகாரி பேசுறேன்” என்றார். சொல்லுங்க சார் என்றேன். […]