மலைவேம்பு (Melia Dubia) மரங்கள் பயிரிடுவது சமீப காலங்களில் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. இம்மரங்கள் அதிக வருவாய் தருவதாகவும், முதலீடு குறைவு என்றும், பராமரிப்பு தேவையில்லை என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இதன் பின்னணி என்ன, இது எல்லாம் உண்மையா என்பதை என்னுடைய அனுபவத்தை வைத்து இங்கே தொகுத்துள்ளேன்.